
சுண்டல், தண்ணீர் பாக்கெட்,மற்றும் சென்னை மெரினா மணலில் நொறுக்கு தீனி விற்கும் சிறுவர்களையும் அவர்களுக்கு பின்னால் உள்ள சோகங்களையும் முடிந்தவரை விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் பண்டிராஜ். படிக்கவேண்டும் என்ற ஆசையில் சித்தப்பாவிடம் இருந்து தப்பித்து சென்னை வரும் அம்பிகாபதி(பாண்டி) தண்ணீர் பாக்கெட் விற்கிறான். ஏற்கனேவே அங்கே தண்ணீர் பாக்கெட் விற்கும் கைலாஷ் நண்பனாகிறான். சிறு தவறு செய்துவிட்டு சென்னை வரும் கைலாசை தேடி போலீஸ் அலைகிறது. பெட்ரோல் திருடும் சிறுவன் மூலம் போலீஸ் கைலாசை பிடிக்கிறது. இதற்கிடையில் எப்படியாவது காதலித்து, காதலியுடன் பீச் மணலில் அமர வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் செந்தில் நாதன்(சிவகார்த்திகேயன்). அவருடைய காதலி சொப்ன சுந்தரி(ஓவியா) அவர்களுக்கு இடையே நடக்கும் ஊடல், கூடல் என்று ஒரு புறம் கதை நகர்கிறது.

0 Comments:
Post a Comment